Wednesday 24 October 2012

சங்கத்தின் அரும்பணி: நடைப்பயிற்சி மைதானம் ஏற்பாடு

விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில், அமர்ஜோதி சத்தியமுர்த்தி நகரில்  உள்ள தனியாருக்குச் சொந்தமான நான்கு மனைகளில் (மனை உரிமையாளர்களின் ஒப்புதலுடன்) குவிந்திருந்த குப்பைகள், கற்களை அகற்றி, அங்கு நமது பகுதிப் பெண்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வசதியாக மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது.

மைதானத்தில் நடந்த நிலம் சமன் படுத்தும் பணியின்  படங்கள்  கீழே...






சங்கத்தின் அரும்பணி: முட்புதர்கள் அகற்றம்

விவேகானந்தா  குடியிருப்போர்  நலச் சங்கம் சார்பில், நமது பகுதியில் காலி இடங்களில் படர்ந்திருந்த  வேலி காத்தான் முட்புதர்கள் அனைத்தும் கடந்த அக்டோபார் 12 ம் தேதி  அகற்றப்பட்டன. இதற்காக சங்கம் சார்பில்  ரூ. 6500 செலவு செய்யப்பட்டது.

முட்புதர்கள் அகற்றப்பட்டது தொடர்பான படங்கள் இங்கே உள்ளன...











நமது அலுவலகம் - படங்கள்

 வி.கு.ந.சங்க அலுவலக கட்டடம்- தூரப்பார்வையில்...

வி.கு.ந. அலுவலக கட்டடம்- கிட்டப்பார்வையில்...


Saturday 20 October 2012

ஆயுதபூஜை அழைப்பிதழ்



 20.10.2012


பெறுநர்:
அனைத்து உறுப்பினர்கள்,
விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்,
காங்கேய நகர், ஐஸ்வர்யா கார்டன், அமர்ஜோதி சத்தியமூர்த்தி நகர்,
காங்கயம் சாலை, திருப்பூர்.

ஆயுதபூஜை அழைப்பிதழ்
அன்புடையீர், 

    வணக்கம்.

    நமது பகுதியின் முன்னேற்றத்துக்காக 'விவேகானந்தா  குடியிருப்போர் நலச் சங்கம்' அமைத்து,  நம்மால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் ஆர்வத்துடன் ஒத்துழைப்பு நல்கி வரும் அனைவருக்கும் நன்றி. 

    இம்மாதம்  நமது பகுதியில் உள்ள முட்புதர்கள் ரூ. 13,000 செலவில் அகற்றப்பட்டுள்ளன.  தவிர, சங்க அலுவலகத்தின் அருகில் உள்ள தனியார் இடத்தை அவர்களின்  அனுமதியுடன் சமன் செய்துள்ளோம். இந்த இடத்தில் காலை, மாலை வேளைகளில் நமது பகுதியில் உள்ள அனைவரும், குறிப்பாக பெண்கள் அனைவரும் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியும்.  தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நமது உடல்நலனுக்கு மிகவும் நல்லது. வரும் விஜயதசமி நாளில் இருந்து இங்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள அனைவரையும் அழைக்கிறோம். 

   நமது பகுதியின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட இரவுக்காவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இப்போது திரு. நீலகண்டன் என்ற ஒரு காவலர் மட்டும் பணியில் உள்ளார். அவரது அலைபேசி எண்: 85088 09096. தீபாவளிக்குப் பிறகு சந்தா வசூலைப் பொறுத்து கூடுதல் காவலரை நியமிக்க முடிவு செய்துள்ளோம். 

  வரும் 23.10.2012, செவ்வாய்க்கிழமை, காலை 8.00 மணியளவில், நமது VRWA சங்க அலுவலகத்தில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவுக்கு தாங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். 

  நன்றி.

நகல்: அலுவலக அறிவிப்புப் பலகை.