Saturday 30 July 2011

குறிக்கோளும் செயல்முறையும்


திருப்பூர் மாநகராட்சியின் 44 -வது வார்டுக்கு உள்பட்ட ஐஸ்வர்யா கார்டன்,  அமர்ஜோதி சத்தியமூர்த்தி நகர், 40 -வது வார்டுக்கு உள்பட்ட காங்கேய நகர் பகுதிகள் அருகருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகள். இந்தப் பகுதிகளில் சுமார் 150 வீடுகள் உள்ளன; 200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

இப்பகுதிகளின் வளர்ச்சிப் பணிகளில் கவனம் கொடுக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், 'விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்' - Vivekanandha Residents Welfare Association - என்ற பெயரில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.

2011, ஏப்ரல் 10 ல் துவக்கப்பட்ட இச்சங்கத்தில் இதுவரை 70க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். வீடுகளின் உரிமையாளர்களும், வாடகைக்கு குடியிருப்போரும் எமது சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதன் மூலமாக, எமது பகுதியின் தேவைகள், பிரச்னைகளை நேரில் அறிந்து அதற்கான தீர்வு காண முயற்சிக்கிறோம். சங்கத்திற்கு சந்தா தொகை செலுத்துவதன் மூலமாக, ஒவ்வொரு உறுப்பினரும் பொறுப்புணர்வுடன் தமது பகுதியின் வளர்ச்சியில் பங்கேற்க முடிகிறது.

திருப்பூர் ஊரக காவல்நிலைய உதவியுடன் சமுதாய காவலர் (Community Police) அமைப்புடன் இணைந்து, எமது பகுதியில் இரவுநேரக் காவல் பணியை மேற்கொண்டு வருகிறோம்.

சாலையின் இருபுறமும் மரங்கள் வளர்த்து வருகிறோம். எமது பகுதியை குப்பைகளற்ற பகுதியாக்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு. எமது பகுதிக்கு அரசின் நலத் திட்டங்களை அரசு நிர்வாகங்களுடன் தொடர்பு கொண்டு பெறுவதும் எங்கள் நோக்கம்.

குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளாக 7 பேரும், அவர்களுக்கு உதவ 18 நிர்வாகக் குழு உறுப்பினர்களும் ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாதந்தோறும் சந்தித்து வருகின்றனர்.

'ஒற்றுமையே வலிமை; தேசமே தெய்வம்' என்பதே எமது சங்கத்தின் அடிப்படை குறிக்கோள் ஆகும்.

சமுதாயக் காவல் மையம் திறப்புவிழா அழைப்பிதழ்


நமது சங்கம்  வரும் 10.08.2011  அன்று நடத்தவுள்ள 
சமுதாயக் காவல் மையம்  திறப்புவிழா  மற்றும் சுதந்திர தின விழா அழைப்பிதழ். 

அழைப்பிதழைச்  சொடுக்கினால் பெரிதாகத் தெரியும்.





அனைவரும் வருக!  

சமுதாயக் காவல் மையம் திறப்பு விழா அழைப்பிதழ் விபரம்



VRWA சமுதாயக் காவல்மைய சோதனைச் சாவடி


அன்புடையீர்,


வணக்கம்.

    நமது பகுதியின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பைக் கருதி 'விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்' துவக்கி மூன்று மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. இது வரையிலும் நூற்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு சிறப்புற இயங்கி வரும் நமது சங்கம், இப்போது சமுதாயக் காவல் மையத்தின்  திறப்பு விழாவை ஆகஸ்ட் 10 ம் தேதி நடத்துகிறது.

   கடந்த மூன்று மாதங்களாகஎமது பகுதியில்  இரவுநேரக்   காவல் பணிசமுதாயக் காவல்  அமைப்பால் (COMMUNITY POLICE) செம்மையாக நடந்து வருகிறது. இதற்கென, சமுதாயக் காவல் மைய சோதனைச் சாவடி கட்டப்பட்டுள்ளது.

      இதன் துவக்க விழாவில், திருப்பூர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. V.பாலகிருஷ்ணன் IPS அவர்களும், காவல் துணை கண்காணிப்பாளர்  உயர்திரு. R.ராஜாராம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.   இவ்விழாவில், திருப்பூர் மாநகர மன்ற உறுப்பினர் திருSPA. சேட் (ஷாஜஹான் அவர்களும் நல்லூர் நகராட்சி துணைத் தலைவர் திருமதி J.நிர்மலா தேவி அவர்களும் பங்கேற்று வாழ்த்துகின்றனர்.

    அடுத்து, நமது தாய்த் திருநாட்டின் சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15  ம் தேதி நமது பகுதியில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாக்களில் தாங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

     நாம் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக செயல்பட்டால் நமது பகுதி மேம்படும். நமது சங்கத்தின் வளர்ச்சிக்கு தங்கள் மேலான ஆலோசனைகளையும் நல்லாதரவையும்  நல்குமாறு அனைவரையும் வேண்டுகிறோம்.
-நிர்வாகிகள்
--------------------------------------------------------------------- 
நிகழ்ச்சி  நிரல்

நாள்         :  10.08.2011, புதன்கிழமை
நேரம்        :  சரியாக மாலை 5.00 மணி
இடம்        :  சமுதாயக் காவல் மையம்  
                       அமர்ஜோதி சத்தியமூர்த்தி நகர்.
தலைமை    திருS.P.A. சேட் (ஷாஜஹான் 
                   41 வது வார்டு மாமன்ற உறுப்பினர்,
                திருப்பூர் மாநகராட்சி.
முன்னிலை  திருமதி. J. நிர்மலா தேவி  
              துணைத் தலைவர்நல்லூர் நகராட்சி.
வரவேற்புரை : திரு. P.சிவநாதன்
              தலைவர்,
              விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்.

பெயர்ப்பலகை திறப்புவாழ்த்துரை:
              உயர்திரு. R.ராஜாராம்
              காவல் துணை கண்காணிப்பாளர், திருப்பூர்.

சமுதாயக் காவல் மையம் திறப்பு, சிறப்புரை:
              உயர்திரு. V.பாலகிருஷ்ணன், IPS
              மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருப்பூர்.
நன்றியுரை  :  திரு. S.சுந்தரம்
              பொருளாளர்,
              விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்.


அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்... 


.

வி.கு.ந.சங்கத்தின் அறிவிப்பு: 2


ஒற்றுமையே வலிமை                                                    தேசமே தெய்வம்


அறிவிப்பு
         நாள்: 27.06.2011
           
விவேகானந்தா குடியிருப்போர் நலச்சங்க முடிவின்படி,  நமது பகுதியின்  பாதுகாப்பிற்காக, திருப்பூர் ஊரக காவல் நிலையம் சார்பாக சமுதாயக் காவலர்களை (COMMUNITY POLICE)  நியமனம் செய்துள்ளோம்.

நமது பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு கொடுக்குமாறு அனைவரையும் வேண்டுகிறோம்.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் நபர்கள் காவல் நிலையத்திற்கு தெரிவித்துவிட்டுச் செல்லவும்; வீடு திரும்பியவுடன் காவல் நிலையத்திற்குத் தெரியப்படுத்தவும்.

நமது பகுதியில் இரவு 11.00 மணிக்கு மேல் சந்தேகப்படும்படியான நபர்களைக் கண்டால் உடனே  85088 09096  என்ற அலைபேசி எண்ணிற்கு, சோதனைச் சாவடியிலுள்ள காவலரை தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.

திருப்பூர் ஊரக காவல் நிலைய
தொலைபேசி எண்: 0421  - 2219880

திரு. சண்முகம்
(சமுதாயக் காவலர்- பொறுப்பாளர்) எண்:  97153 16440

அனைவரது ஒத்துழைப்பையும் நாடும்,

நிர்வாகிகள்  

இரவுநேரக் காவல்பணி விதிமுறைகள்

VRWA

விவேகானந்தா குடியிருப்போர் நலச்சங்கத்தில் உறுப்பினராக உள்ள காங்கேய நகர், ஐஸ்வர்யா கார்டன், அமர்ஜோதி சத்தியமூர்த்தி நகர் பகுதி மக்களின் இரவுநேரப்   பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், திருப்பூர் ஊரகக்   காவல் நிலையத்துடன் இணைந்து, சமுதாயக் காவலர் அமைப்பின் (COMMUNITY POLICE)  உதவியுடன் இரவுநேர ரோந்துடன் கூடிய காவல் பணி மேற்கொள்ளப்படுகிறது.

தினசரி இரவுக்காவலர்கள் இருவர் மாலை 6.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 6.00 மணிவரை பணியில் இருக்க வேண்டும். அவர்களுக்கு மாத ஊதியம் மாத ஊதியம் சங்கம் சார்பில், சமுதாயக் காவலர்களின் பொறுப்பாளரிடம் வழங்கப்படும்.

இரவுக்காவலர்களாக பணிபுரிபவர்களின் புகைப்படத்துடன் கூடிய அனுமதிக்கடிதம் சோதனைச்சாவடியில் அனைவர் பார்வைக்கும் படும்படி வைக்கப்பட வேண்டும்; மாற்று ஏற்பாடாக பணி புரிபவர்கள் குறித்தும் புகைப்படத்துடன் கூடிய விபரம் அளிக்கப்பட வேண்டும்.

இரவுக்காவலர்களாக வருபவர்கள் ஏதாவது காரணத்தால் விடுப்பு எடுத்தால் அதுகுறித்து சங்க நிர்வாகிகளிடம்  தகவல் தெரிவித்து, மாற்று ஏற்பாடாக பணிக்கு வருபவர் குறித்தும் சமுதாயக் காவலர்- பொறுப்பாளர் தெரியப்படுத்த வேண்டும்.

குடியிருப்போர் சங்கம் சார்பில் வழங்கப்பட்டுள்ள காவல் சீருடையில், பாதுகாப்புக் கருவிகளுடன் (டார்ச் லைட், தடி, விசில், மொபைல் போன்), அவர்கள் பணியில் இருக்க வேண்டும்.

காவல் பணிக்காக நமது பகுதியின் மையப் பகுதியில் சோதனைச்சாவடி அமைக்கப் பட்டுள்ளது. அங்கு காவலர்கள் இருக்க வேண்டும்; பணியின்போது காவலர்கள் உறங்குவது கூடாது.

தினசரி நான்கு முறை, 10.00 மணி, 12.00 மணி, 2.00 மணி, 4.00 மணி அளவில், மூன்று பகுதிகளையும் இணைக்கும் வகையில், அனைத்து சாலைகள், குறுக்கு சந்துகளை கவனிக்கும் வகையில், ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.

தினசரி வருகைப் பதிவேடு, காவல் நிலைய பட்டா பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். இதனை சங்க நிர்வாகிகள் இரவுநேர ஆய்வில் சரிபார்ப்பார்கள்.

சந்தேகத்திற்கு இடமான நபர்கள் நடமாட்டம் குறித்து சோதனைச்சாவடியில் உள்ள சமுதாயக் காவலருக்கு குடியிருப்புவாசிகள் மொபைல் போனில் தகவல் கொடுத்தால், உடனே அங்கு செல்லத் தக்கவகையில் காவலர்கள் தயாராக இருக்க வேண்டும்.

இரவுக் காவலர்களின் வசதிக்காக தேநீர் வைத்துக்கொள்ள மின்சார சாதனமும் பாத்திரங்களும் பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன. அந்தப் பொருள்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

இரவுக் காவலருக்கு அளிக்கப்பட்டுள்ள மொபைல் போன், டார்ச் லைட் ஆகியவை   எப்போதும் பயன்படுத்தத் தக்க நிலையில்சார்ஜ் செய்யப்பட்டு இருக்க வேண்டும்மொபைல் போன் மட்டும், பகல்நேரங்களில் சமுதாயக் காவலர்- பொறுப்பாளரிடம் இருக்க வேண்டும். பிற பாதுகாப்பு சாதனங்களை சங்க நிர்வாகியிடம் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும்.

சோதனைச்சாவடி அறையின் விளக்குகளை அணைத்து, அறையைப் பூட்டி சாவியை அதற்கான பொறுப்பாளரிடம் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும்.

இரவுக்காவல் பணி குறித்த மக்களின் அபிப்பிராயங்களை சங்க நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டு, அதற்கேற்ப தங்கள் பணியை இரவுக்காவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் இரவுக்காவல் பணியை ஆய்வு செய்யவும் மேம்படுத்தவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவிற்கு ஒத்துழைப்பு அளித்து, சங்கம் சிறப்புற இயங்க சமுதாயக் காவலர்கள் உதவ வேண்டும்.

காவல் பணி குறித்த குறைபாடுகளை சமுதாயக் காவலர் அமைப்பின் பொறுப்பாளரிடம், சங்க நிர்வாகிகள் மட்டுமே கூற வேண்டும்.

காவல்நிலைய அதிகாரிகளுடன் சுமுகமான உறவை ஏற்படுத்தி, விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்களின் பாதுகாப்பை சமுதாயக் காவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த ஏற்பாடு, விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்தாலும்  சமுதாயக் காவலர் அமைப்பாலும் ஏக மனதாகத் தீர்மானிக்கப்படுகிறது 

இப்படிக்கு

P.சிவநாதன்                         P.சண்முகம்
              தலைவர் (வி.கு.ந.சங்கம்)                   சமுதாயக் காவலர் பொறுப்பாளர்
நாள்: 12.07.2011