விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்
அமர்ஜோதி சத்யமூர்த்தி நகர், ஐஸ்வர்யா கார்டன், காங்கேய நகர்.
காங்கயம் சாலை, திருப்பூர் - 641
604.
20.04.2012
பெறுனர்:
உயர்திரு. மண்டலத் தலைவர் அவர்கள்,
நல்லூர் மண்டலம், (மாமன்ற உறுப்பினர், 40வது வார்டு),
திருப்பூர் மாநகராட்சி,
திருப்பூர்.
பொருள்: எமது பகுதியில் உள்ள தீர்வு காணப்பட வேண்டிய பிரச்னைகள்.
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம்.
திருப்பூர் மாநகராட்சியின் நல்லூர் மண்டலத்துக்கு உள்பட்ட 44 வது வார்டில் அமர்ஜோதி சத்யமூர்த்தி நகர், ஐஸ்வர்யா கார்டன் பகுதிகள் உள்ளன. 40 வது வார்டில் காங்கேய நகர் உள்ளது. இம்மூன்று பகுதி குடியிருப்போரும் இணைந்து அமைத்துள்ள சங்கம், விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம் ஆகும்.
எங்கள் பகுதியில் நிலவும் அடிப்படைப் பிரச்னைகளை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். இவற்றுக்கு மாநகராட்சி நிர்வாகம் தகுந்த தீர்வு காண உதவுமாறு வேண்டுகிறோம்.
நன்றி.
காண்க: எமது பகுதியில் கவனம் செலுத்த வேண்டிய பிரச்னைகள் (இணைப்பு).
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,
P .சிவநாதன்
(தலைவர்)
நகல்கள்:
வணக்கத்துக்குரிய மேயர் அவர்கள், திருப்பூர் மாநகராட்சி.
உயர்திரு, ஆணையர், திருப்பூர் மாநகராட்சி.
உயர்திரு துணை மேயர், திருப்பூர் மாநகராட்சி.
உயர்திரு மாமன்ற உறுப்பினர், 44 வது வார்டு, திருப்பூர் மாநகராட்சி.
***
எமது பகுதியில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள்
1. குப்பை சேகரிப்பு:
அ) எமது பகுதியில் வீடு வீடாக குப்பை சேகரிக்க ஆட்கள் வருவது சமீப காலமாக குறைந்துள்ளது. தினசரி குப்பை சேகரிப்போர் வர ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஆ) அமர்ஜோதி சத்யமூர்த்தி நகர், ஐஸ்வர்யா கார்டன், காங்கேய நகர் ஆகிய மூன்று பகுதிகளிலும் குப்பைத் தொட்டிகளை பொது இடத்தில் வைக்க வேண்டும்.
2. சாக்கடை பராமரிப்பு:
அ) இப்பகுதிகளில் உள்ள சாக்கடைகளை வாரம் ஒருமுறையாவது தூர் வார ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஆ) அமர்ஜோதி சத்தியமுர்த்தி நகரில் ஒரு தெருவில் விடுபட்டுள்ள சாக்கடை பணியைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
இ) காங்கேய நகர், முதல் வீதியில் சாக்கடை முழுமையாக அமைக்க
வேண்டியுள்ளது.
3. குடிநீர் விநியோகம்:
அ) எமது பகுதிக்கு சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு முன் சுமார் 20 நாட்கள் குடிநீர் வழங்கப்படாததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
ஆ) காங்கேய நகர் பகுதியில் பொது குடிநீர்க் குழாய்கள் உள்ளன. அதே போல, ஐஸ்வர்யா கார்டன், அமர்ஜோதி சத்யமூர்த்தி நகர் பகுதிகளிலும் பொதுக் குழாய்களை அமைக்க வேண்டும்.
4. தெருநாய்கள் தொல்லை.
எமது பகுதியில் 20 க்கு மேற்பட்ட தெருநாய்கள் திரிகின்றன. இவை அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டு சாலையில் செல்வோர் மீது பாய்கின்றன. இரவில் நாய்கள் சண்டையிட்டுக் கொண்டு குரைப்பதால் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. அசம்பாவிதங்கள் நிகழும் முன், தெருநாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த ஆவன செய்ய வேண்டும்.
5. தெருவிளக்குகள்:
அ) எமது பகுதியில் பல தெருவிளக்குகள் எரியாத நிலையில் உள்ளன. இவற்றை பழுது பார்க்க வேண்டும்.
ஆ) காங்கேய நகர் முதல் தெருவும் அமர்ஜோதி சத்யமூர்த்தி நகர் சாலையும் இணையும் இடத்தில் சோடியம் ஒளிவிளக்கு பொருத்த
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. தார்ச்சாலை அமைப்பு:
அ) அமர்ஜோதி சத்யமூர்த்தி நகர், ஐஸ்வர்யா கார்டன் பகுதிகளில் சிறப்பு திட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
இப்பணி தரமின்றி செய்யப் பட்டுள்ளதால், இப்போதே சாலை பல இடங்களில் பெயர்ந்துள்ளது. இதனை ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும்.
ஆ) ஐஸ்வர்யா கார்டனில் ஒரு சந்தில் தார்ச்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. அங்கு புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
இ) காங்கேய நகரில் முதல் தெருவிலும் குறுக்கு சந்துகளிலும் தார்ச்சாலை அமைக்கப் படாமல் உள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. இங்கு சாலை அமைக்க உத்தரவிட வேண்டும்.
வேண்டுகோள்:
எமது பகுதியில் சுமார் 150 வீடுகள் உள்ளன; 200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. எனவே மேற்கண்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து உதவுமாறு மாநகராட்சி நிர்வாகத்தை வேண்டுகிறோம்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
P.சிவநாதன்
(தலைவர், விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்)
(மொபைல் எண்: 93457 30969)
.