23.11.2011
பெறுனர்:
உயர்திரு. ஆணையர்,
திருப்பூர் மாநகராட்சி,
திருப்பூர்.
ஐயா,
வணக்கம்
பொருள்: இறைச்சிக் கடையால் ஏற்படும் சுகாதாரக்கேடு குறித்து புகார்.
திருப்பூர் மாநகராட்சியின் 40-வது வார்டுக்கு உட்பட்ட காங்கேய நகர் பகுதியில், காங்கயம் சாலையில் ‘ஜெகதீஷ் சிக்கன்ஸ்’ என்ற கோழி இறைச்சிக்கடை செயல்படுகிறது. இக்கடையில் சுகாதார விதிகளை மீறி, இறைச்சிக்கழிவுகள் சாக்கடையில் விடப்படுகின்றன. இதற்காக, காங்கேய நகர்- இரண்டாவது வீதியில் சாலையின் குறுக்கே தோண்டி குழாய் பதித்துள்ளனர்.
இறைச்சிக் கடையில் வெளியாகும் ரத்தம் கலந்த கழிவுநீர் சாக்கடையில் விடப்படுவதால் சுகாதாரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தவிர, பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை தனிப்பட்ட நலனுக்காக்காக வெட்டி குழாய் பதித்துள்ளது கண்டிக்கத் தக்கதாகும்.
எனவே இதுகுறித்து ஆய்வு நடத்தி தக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம்.
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,
P.சிவநாதன்
(தலைவர்)
அலைபேசி எண்: 94868 09378.
நகல்கள்:
1. வணக்கத்துக்குரிய மேயர், திருப்பூர் மாநகராட்சி
2. நகர்நல அலுவலர், திருப்பூர் மாநகராட்சி
3. திரு.P.முத்துசாமி, கிழக்கு மண்டலத் தலைவர், 40 -வது வார்டு உறுப்பினர்.
No comments:
Post a Comment