VRWA சமுதாயக் காவல்மைய சோதனைச் சாவடி |
அன்புடையீர்,
வணக்கம்.
நமது பகுதியின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பைக் கருதி 'விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்' துவக்கி மூன்று மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. இது வரையிலும் நூற்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு சிறப்புற இயங்கி வரும் நமது சங்கம், இப்போது சமுதாயக் காவல் மையத்தின் திறப்பு விழாவை ஆகஸ்ட் 10 ம் தேதி நடத்துகிறது.
கடந்த மூன்று மாதங்களாக, எமது பகுதியில் இரவுநேரக் காவல் பணி, சமுதாயக் காவல் அமைப்பால் (COMMUNITY POLICE) செம்மையாக நடந்து வருகிறது. இதற்கென, சமுதாயக் காவல் மைய சோதனைச் சாவடி கட்டப்பட்டுள்ளது.
இதன் துவக்க விழாவில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. V.பாலகிருஷ்ணன் IPS அவர்களும், காவல் துணை கண்காணிப்பாளர் உயர்திரு. R.ராஜாராம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். இவ்விழாவில், திருப்பூர் மாநகர மன்ற உறுப்பினர் திரு. SPA. சேட் (எ) ஷாஜஹான் அவர்களும் நல்லூர் நகராட்சி துணைத் தலைவர் திருமதி J.நிர்மலா தேவி அவர்களும் பங்கேற்று வாழ்த்துகின்றனர்.
அடுத்து, நமது தாய்த் திருநாட்டின் சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15 ம் தேதி நமது பகுதியில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாக்களில் தாங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நாம் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக செயல்பட்டால் நமது பகுதி மேம்படும். நமது சங்கத்தின் வளர்ச்சிக்கு தங்கள் மேலான ஆலோசனைகளையும் நல்லாதரவையும் நல்குமாறு அனைவரையும் வேண்டுகிறோம்.
-நிர்வாகிகள்
---------------------------------------------------------------------
நிகழ்ச்சி நிரல்
நாள் : 10.08.2011, புதன்கிழமை
நேரம் : சரியாக மாலை 5.00 மணி
இடம் : சமுதாயக் காவல் மையம்,
அமர்ஜோதி சத்தியமூர்த்தி நகர்.
தலைமை : திரு. S.P.A. சேட் (எ) ஷாஜஹான்
41 வது வார்டு மாமன்ற உறுப்பினர்,
திருப்பூர் மாநகராட்சி.
முன்னிலை : திருமதி. J. நிர்மலா தேவி
துணைத் தலைவர், நல்லூர் நகராட்சி.
வரவேற்புரை : திரு. P.சிவநாதன்
தலைவர்,
விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்.
பெயர்ப்பலகை திறப்பு, வாழ்த்துரை:
உயர்திரு. R.ராஜாராம்
காவல் துணை கண்காணிப்பாளர், திருப்பூர்.
சமுதாயக் காவல் மையம் திறப்பு, சிறப்புரை:
உயர்திரு. V.பாலகிருஷ்ணன், IPS
மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருப்பூர்.
நன்றியுரை : திரு. S.சுந்தரம்
பொருளாளர்,
விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்...
.
No comments:
Post a Comment