Tuesday 16 August 2011

வி.கு.ந.சங்கத்தின் சுதந்திர தின விழா

 
விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில், அமர்ஜோதி சத்தியமுர்த்தி  நகரில் அமைக்கப்பட்டுள்ள சமுதாயக் காவல் மையத்தில் 15.08.2011 அன்று காலை  8.45 மணியளவில் சுதந்திரதின விழா சிறப்பாக நடைபெற்றது.
 
துணைத் தலைவர் பி.செல்லமுத்து தலைமை தாங்கினார். மற்றொரு துணைத் தலைவர் கே.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பொருளாளர் எஸ்.சுந்தரம் வரவேற்றார். பணிநிறைவு  ஆசிரியர் ஆர்.முத்துவேலு தேசியக்கொடி ஏற்றினார்.
 
சிறப்புரை ஆற்றிய சங்கத்தின் தலைவர் பி.சிவநாதன், ''அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரம் ஊழல் அரசியல்வாதிகளால் நாசமாவதாகவும், அதற்கு எதிராக நாட்டுப்பற்றுள்ள மக்கள் ஒன்றிணைய வேண்டுமென்றும்'' கூறினார்.
 
சங்கத்தின் துணை செயலாளர் எல்.ராமசந்திரன் நன்றி கூறினார். தேசியகீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.
 

No comments:

Post a Comment