Saturday 27 August 2011

சிந்திக்க சில நிமிடம் - 2


அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு காட்சி

'மக்கள் லோக்பால்' மசோதா என்பது என்ன?
இன்று நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது, சமூக சேவகர் திரு. அண்ணா ஹசாரே  தில்லியில் 11 நாட்களாக  இருந்துவரும் தொடர் உண்ணாவிரதம். நாட்டில் நிலவும் ஊழல்களால் வெதும்பிய மக்களின் மனக் குமுறல்களுக்கு வடிகாலாக ஹசாரே உண்ணாவிரதம் இருப்பதால்தான், நாடு முழுவதும் அவருக்கு மாபெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில், ஹசாரே குழுவினர் முன்வைக்கும் ஜன லோக்பால் (மக்கள் லோக்பால்) மசோதா குறித்து இன்று நமது நாடாளுமன்றத்தில் விவாதம் துவங்கி உள்ளது. ஆனால், ஜன லோக்பால் என்றால் என்னவென்று பெரும்பாலோருக்கு தெரிவதில்லை. நமது சங்க உறுப்பினர்கள் இதுகுறித்து அறிவது அவசியம் என்ற முறையில், கீழ்க்கண்ட விபரங்கள் இங்கு அளிக்கப்பட்டுள்ளன.

சட்டம் என்பது- அதை நடைமுறைப்படுத்தும் அதிகார வர்க்கம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கையில் மட்டும் இருக்காமல், அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்கும், பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும்  மக்கள் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும் என்பதே மக்கள் லோக்பாலின் சாராம்சம். இந்த தகவல்களை அளித்த தேசமே தெய்வம் வலைப்பூவுக்கு நன்றி.

குறிப்பு: கீழுள்ள படங்களை சொடுக்கினால் படம் பெரிதாகும்.
                   அதை தெளிவாகப் படிக்க முடியும்.














No comments:

Post a Comment